Skip to main content

மாநபியின் புகழ் பாடுவோம்


நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களால் அமைக்கப்பட்ட தனி மேடையில் (மிம்பரில்) நின்று ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து கவிதை பாட, அதனைக் கேட்டு மகிழ்ந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் "அல்லாஹ்வின் தூதரை புகழும் காலமெல்லாம், ரூஹுல் குத்ஸியை (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்) அவர்களை கொண்டு ஹஸ்ஸானை நிச்சயமாக அல்லாஹ் வலிமைப்படுத்துவானாக! என்று கூறி ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வாழ்த்தினார்கள்.

ஸஹிஹுல் புகாரி

************************************************************************************************************************************

ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:

1)
இறைமறுப்பாளர்களே!) முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை  குறைவுபடுத்தி நீங்கள் கவிபாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடமுண்டு.

2)
நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.

3)
அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான்: சத்தியத்தைக் கூறுகிற ஒர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன் அதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
ஸஹிஹுல் முஸ்லிம் - 4545

Comments

Popular posts from this blog

ஹாஜாஜீ கொடி ஏற்றமும் மவலித் மனாகிப் மஜ்லிஸூம்

கரீபே நவாஸ், அதேயே றஸுல், குத்புல் ஹிந்த் ஹாஜா முயீனுத்தீனில் சிஸ்தீ (றழியல்லாஹூ அன்ஹூ) அன்னவர்களின் நினைவாக கல்முனை  பத்ரிய்யஹ்  பள்ளிவாயலில் நடைபெற்ற கொடி ஏற்றம் மற்றும் மனாகிப் மஜ்லிஸ் நிகழ்வில் கலந்து கொண்ட சங்கைக்குரிய உலமாக்கள் 

அண்ணல் நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)அவர்களின் அழகிய உவமைகள்

இறை நம்பிக்கையாளர் கண்ணாடியை போல... "ஓர் நம்பிக்கையாளர் இன்றொரு இறைநம்பிக்கையாளருக்கு சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரரை அழிவிலிருந்து காப்பாற்றுகிறார் அவருக்குப் பக்கபலமாக இருந்து பாதுகாக்கின்றார்”  (அபூஹூரைரா(ரளி)முஸ்லிம்). ஓர்இநம்பிக்கையாளர் இன்னொரு இறைநம்பிக்கையாளருக்கு கண்ணாடியைப் போன்றவர். கண்ணாடி குறைகளை சுட்டிக் காட்டுவது போல அவரிடம் ஏதேனும் குற்றங்குறைகளைக் கண்டால் அதனை அவரிடம் சுட்டிக்காட்டி அவரிடமிருந்து அதை அகற்ற உதவிடும்.  கறைபடிந்த முகத்தோடு கண்ணாடி முன்னால் போய் நாம் நின்றால் கூட்டாமல்- குறைக்காமல் உள்ளதை உள்ளபடி அது நமக்குச் சுட்டிக்காட்டும். அதுபோல பிற சகோதரரிடம் உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல் உள்ளதை உள்ளவாறு சுட்டிக்காட்ட வேண்டும். கண்ணாடியைப் பொறுத்தவரை அந்த நிமிடத்தின் காட்சியை மட்டுமே எடுத்துக்காட்டும். அதற்கு முந்தியகாட்சி அதில் தெரியாது. அதை போல  பிறமனிதனின் கடந்த காலத் தவறுகளை நினைவு கூர்ந்து கிளறக்கூடாது. இறந்த காலத்திற்குச் செல்வது ஆறிப்போன புண்னை மீண்டும் குத்திக் கிளறுவதற்கொப்பாகும். கண்ணாடி முன்னால் நாம் நிற்கும் போது மட்டுமே அ...

அண்ணல் நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)அவர்களின் அழகிய உவமைகள்

நல்ல  நண்பன் கஸ்துரி  வியாபாரியை போன்றவன்... நபி  (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:  நல்ல  நண்பன்  நறுமண பொருட்களை விற்கும் ஒரு வியாபாரியை போன்றவன். அவன் நமக்கு எதையும் தரவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அவன் கடையில் உள்ள சிறந்த வாசனையாவது நம்மை வந்தடையும்.  தீய  நண்பன் , கொல்லனின் (இரும்பு வியாபாரியின்) சூளையை போன்றவன். நாம் அதன் நெருப்பிலிருந்து தப்பித்து கொண்டாலும், குறைந்தபட்சம் அதன் புகை நம் உடலையும், உடமையையும் அலங்கோலப்படுத்தி விடும். - (அபு மூசா (ரலி), புஹாரி, முஸ்லிம்.  நபி  தோழர்:  நல்ல  நண்பனையும் - தீய நண்பனையும் நாங்கள் எவ்வாறு அறிந்து கொள்வது? நபி (ஸல்):  நீங்கள்  இறைவனை மறந்திருக்கும் போது உங்களுக்கு இறை நினைவூட்டுபவன் நல்ல நண்பன். அவ்வாறு உங்களுக்கு நினைவூட்டாதவன் தீய நண்பன். மேலும் யாரை கண்டவுடன் உங்களுக்கு இறைநினைவு வருகிறதோ அவர் மனிதர்களில் சிறந்தவர்.  மனிதன்  தன் வாழ்வுக்கான முன்னேற்ற பாதையில் புதிய நட்புறவுகளை உருவாக்கி கொள்வதை இஸ்லாம் தடை ஏதும் செய்யவில்லை. அவ்வாறு உ...