https://drive.google.com/file/d/0BxJ4GoVHh4k1VTF5Ynk0WXcwbDA/view?usp=sharing
அஷ்ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அஷ்ஷெய்கு முஹம்மது கோட்டாரி ( ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு முப்பத்திநான்கு மிஃறாஜ்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் திருமேனியோடு நடந்த மிஃறாஜ் ஒன்றுதான் . இது விழிப்பில் நடந்தது . ஸித்ரத்துல் முன்தஹா தாண்டி அர்ஷு , குர்ஷியும் தாண்டிச் சென்று புறக்கண்ணால் அல்லாஹ்வை தரிசித்து , இதில் தொழுகையை பரிசாக வாங்கி வந்தார்கள் . இதுதவிர ஏனைய மிஃறாஜுகள் றூஹின் மூலம் நடந்தது . இவ்வாறு இமாம் அப்துல் வஹாப் ஷஃறானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தங்களது யவாகிதில் வரைந்துள்ளார்கள் . விழிப்பில் நடந்த இந்த மிஃறாஜ் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முஃஜிஸாத்துக்களில் மிகவும் முக்கியமானதும் பூரணமானதுமாகும் . இந்த மிஃறாஜ் சரியான சொல்லின்படி ஹிஜ்ரத்திற்கு ஒன்னரை வருடத்திற்கு முன் றஜப் 27 திங்கள் கிழமையில் நடந்தது . மக்களின் நடைமுறையும் இத்தினத்தில்தான் உண்டு . இவ்வாறு தப்ஸீர் றூஹுல் பயானில் குறிப்பிடப்பட்டுள்ளது . இரவில் சிறப்பானது றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள...