Skip to main content

Posts

Showing posts from June, 2013

மிஃறாஜ் இரவைக் கொண்டாடலாமா?

அஷ்ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அஷ்ஷெய்கு முஹம்மது கோட்டாரி ( ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு முப்பத்திநான்கு மிஃறாஜ்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் திருமேனியோடு நடந்த மிஃறாஜ் ஒன்றுதான் .  இது விழிப்பில் நடந்தது . ஸித்ரத்துல் முன்தஹா தாண்டி அர்ஷு ,  குர்ஷியும் தாண்டிச் சென்று புறக்கண்ணால் அல்லாஹ்வை தரிசித்து ,  இதில் தொழுகையை பரிசாக வாங்கி வந்தார்கள் . இதுதவிர ஏனைய மிஃறாஜுகள் றூஹின் மூலம் நடந்தது .  இவ்வாறு இமாம் அப்துல் வஹாப் ஷஃறானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தங்களது யவாகிதில் வரைந்துள்ளார்கள் . விழிப்பில் நடந்த இந்த மிஃறாஜ் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முஃஜிஸாத்துக்களில் மிகவும் முக்கியமானதும் பூரணமானதுமாகும் . இந்த மிஃறாஜ் சரியான சொல்லின்படி ஹிஜ்ரத்திற்கு ஒன்னரை வருடத்திற்கு முன் றஜப்  27  திங்கள் கிழமையில் நடந்தது .  மக்களின் நடைமுறையும் இத்தினத்தில்தான் உண்டு .  இவ்வாறு தப்ஸீர் றூஹுல் பயானில் குறிப்பிடப்பட்டுள்ளது . இரவில் சிறப்பானது றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள...

அண்ணல் நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)அவர்களின் அழகிய உவமைகள்

நல்ல  நண்பன் கஸ்துரி  வியாபாரியை போன்றவன்... நபி  (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:  நல்ல  நண்பன்  நறுமண பொருட்களை விற்கும் ஒரு வியாபாரியை போன்றவன். அவன் நமக்கு எதையும் தரவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அவன் கடையில் உள்ள சிறந்த வாசனையாவது நம்மை வந்தடையும்.  தீய  நண்பன் , கொல்லனின் (இரும்பு வியாபாரியின்) சூளையை போன்றவன். நாம் அதன் நெருப்பிலிருந்து தப்பித்து கொண்டாலும், குறைந்தபட்சம் அதன் புகை நம் உடலையும், உடமையையும் அலங்கோலப்படுத்தி விடும். - (அபு மூசா (ரலி), புஹாரி, முஸ்லிம்.  நபி  தோழர்:  நல்ல  நண்பனையும் - தீய நண்பனையும் நாங்கள் எவ்வாறு அறிந்து கொள்வது? நபி (ஸல்):  நீங்கள்  இறைவனை மறந்திருக்கும் போது உங்களுக்கு இறை நினைவூட்டுபவன் நல்ல நண்பன். அவ்வாறு உங்களுக்கு நினைவூட்டாதவன் தீய நண்பன். மேலும் யாரை கண்டவுடன் உங்களுக்கு இறைநினைவு வருகிறதோ அவர் மனிதர்களில் சிறந்தவர்.  மனிதன்  தன் வாழ்வுக்கான முன்னேற்ற பாதையில் புதிய நட்புறவுகளை உருவாக்கி கொள்வதை இஸ்லாம் தடை ஏதும் செய்யவில்லை. அவ்வாறு உ...

அண்ணல் நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)அவர்களின் அழகிய உவமைகள்

இறை நம்பிக்கையாளர் கண்ணாடியை போல... "ஓர் நம்பிக்கையாளர் இன்றொரு இறைநம்பிக்கையாளருக்கு சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரரை அழிவிலிருந்து காப்பாற்றுகிறார் அவருக்குப் பக்கபலமாக இருந்து பாதுகாக்கின்றார்”  (அபூஹூரைரா(ரளி)முஸ்லிம்). ஓர்இநம்பிக்கையாளர் இன்னொரு இறைநம்பிக்கையாளருக்கு கண்ணாடியைப் போன்றவர். கண்ணாடி குறைகளை சுட்டிக் காட்டுவது போல அவரிடம் ஏதேனும் குற்றங்குறைகளைக் கண்டால் அதனை அவரிடம் சுட்டிக்காட்டி அவரிடமிருந்து அதை அகற்ற உதவிடும்.  கறைபடிந்த முகத்தோடு கண்ணாடி முன்னால் போய் நாம் நின்றால் கூட்டாமல்- குறைக்காமல் உள்ளதை உள்ளபடி அது நமக்குச் சுட்டிக்காட்டும். அதுபோல பிற சகோதரரிடம் உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல் உள்ளதை உள்ளவாறு சுட்டிக்காட்ட வேண்டும். கண்ணாடியைப் பொறுத்தவரை அந்த நிமிடத்தின் காட்சியை மட்டுமே எடுத்துக்காட்டும். அதற்கு முந்தியகாட்சி அதில் தெரியாது. அதை போல  பிறமனிதனின் கடந்த காலத் தவறுகளை நினைவு கூர்ந்து கிளறக்கூடாது. இறந்த காலத்திற்குச் செல்வது ஆறிப்போன புண்னை மீண்டும் குத்திக் கிளறுவதற்கொப்பாகும். கண்ணாடி முன்னால் நாம் நிற்கும் போது மட்டுமே அ...